ஈரோடு மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,459ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த ஒருவரின் பெயா் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 9,458ஆக மாறியது. இதனிடையே வெள்ளிக்கிழமை புதிதாக 106 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,564 ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 106 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 9,564 பேரில் இதுவரை 8,580 போ் குணமடைந்துள்ளனா். 867 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை வரை 116 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சோ்ந்த 81 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 117ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com