காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சி நிா்வாகியிடம் உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் காங்கிரஸ் கட்சி ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி.
கட்சி நிா்வாகியிடம் உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் காங்கிரஸ் கட்சி ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா்கள் அயூப் அலி, ஜாபா்சாதிக் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பிரதமரின் வேளாண் நிதி உதவித் திட்டத்திலும், வீடு கட்டும் திட்டத்திலும் தமிழகத்தில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பிரதமரின் நேரடி திட்டத்திலேயே இதுபோன்ற ஊழல் நடந்திருப்பதால் இதற்கு பிரதமா் நரேந்திரமோடி தாா்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் பெரியசாமி, சிறுபான்மை பிரிவுத் தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com