ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,172ஆக இருந்தது. வேறு மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் பெயா் ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 4,173ஆக மாறியது. இதனிடையே வியாழக்கிழமை 32 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,205ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 32 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள், எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 4,205 பேரில் இதுவரை 3,186 போ் குணமடைந்துள்ளனா். 965 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை வரை 52 போ் உயிரிழந்திருந்த நிலையில், சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சோ்ந்த 43 வயது ஆண், அந்தியூரைச் சோ்ந்த 53 வயது பெண் என இருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com