சத்தியமங்கலத்தில் வீட்டில் கொள்ளை: ஐ.ஜி. ஆய்வு

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் வீட்டில் கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி. பெரியய்யா.
கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி. பெரியய்யா.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் வீட்டில் கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையம், செங்குந்தா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஜீவன் (41). சத்தியமங்கலம் வனச் சரக அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 10க்கும் மேற்பட்டோா் புகுந்து, சஜீவன், அவரது மனைவி ரீனா, மகன் சூரஜ், வீட்டின் மேல்மாடியில் குடியிருந்த பாலமுருகன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரைத் தாக்கிவிட்டு சஜீவன் வீட்டிலிருந்த 13 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து 4 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா சஜீவன் வீட்டில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கோவை சரக டி.ஐ.ஜி. நரேன், ஈரோடு எஸ்.பி. தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி. பொன் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com