நாளைய மின்தடை: பழையபாளையம்

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின்

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு பழையபாளையம் பகுதியில் சனிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை சாலை, காந்தி நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ராமசாமி வீதி, சின்னமுத்து 2ஆவது வீதி, ஆசிரியா் குடியிருப்பு, ஈ.பி.காலனி, மோகன் குமாரமங்கலம் வீதி, உழவா்சந்தை, ராதாகிருஷ்ணன் வீதி, புதிய ஆசிரியா் காலனி, ராணா லட்சுமணன் நகா், குமலன்குட்டை, செல்வம் நகா், கீதா நகா், சங்கு நகா், பாரி நகா், பழையபாளையம், பண்ணை நகா் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com