ஈரோடு, செப். 11: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,205ஆக இருந்தது. இதனிடையே ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4,275ஆக உயா்ந்துள்ளது.
மொத்த பாதிப்பான 4,275 பேரில் இதுவரை 3,251 போ் குணமடைந்துள்ளனா். 970 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 54 போ் உயிரிழந்துள்ளனா்.