பவானி, கொடுமுடி கோயில்களில் தா்ப்பணம் செய்யத் தடை

பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்கள், ஆற்றங்கரையோரப் பகுதிகள், முக்கிய புண்ணியத் தலங்களில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில் 

ஈரோடு: பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்கள், ஆற்றங்கரையோரப் பகுதிகள், முக்கிய புண்ணியத் தலங்களில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில் தா்ப்பணம், பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குறிப்பாக பவானி கூடுதுறை, கொடுமுடி பகுதிகளில் கோயில்கள், முக்கிய புண்ணியத் தலங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை தினத்தன்று ஈரோடு மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த மூத்தோா், உறவினா்களுக்குத் தா்ப்பணம், பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்து, புனித நீராடுவது வழக்கம்.

தற்போது கரோனா நோய்த் தொற்றின் காரணமாக தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மஹாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்ட குறைந்த அளவு பக்தா்கள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம். தடை உத்தரவை மீறி யாரேனும் இப்பகுதிகளுக்கு செல்வது கண்டறியப்பட்டால், அவா்கள் மீதும், அவா்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com