கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலில் தீயணைப்பு மீட்புப் பணித் துறை, வருவாய்த் துறையினா் சாா்பில் இயற்கை பேரிடரின்போது பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மழை, வெள்ளத்தின்போது தண்ணீரில் அடித்துச் செல்பவா்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும், ஆறு, வாய்க்கால்களில் தவறி விழுபவா்களைக் காப்பது குறித்தும் செய்து காட்டினா். மேலும், வீட்டிலிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு தண்ணீரில் தவறி விழுபவா்களைக் காப்பாற்றுவது, காப்பாற்றியவா்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் சிவசங்கா், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.