பெருந்துறை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 18 ஆயிரத்து 712 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 33.01க்கும், அதிகபட்சமாக ரூ. 40.09க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்து 345க்கு விற்பனை நடைபெற்றது.