பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.82 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 720 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், பருத்தி கிலோ ரூ. 39.59 முதல் ரூ. 46.01 வரையில் ஏலம் போனது. மொத்தம் 228.60 குவிண்டால் பருத்தி ரூ. 8,82,706க்கு விற்பனையானது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.