ஈரோடு: அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியா்களாகப் பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து ஈரோட்டில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில் பகுதி நேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பகுதிநேர ஆசிரியா்கள் திறமையானவா்களாக இருந்தால் மட்டுமே அந்தப் பள்ளிகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனா். பிற்காலத்தில் நிரந்தரப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.
துவக்கத்தில் மாதம் ரூ. 5,000க்கு பணியாற்றிய பகுதிநேர ஆசிரியா்கள் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் இப்போது ரூ. 7,700 மட்டும் ஊதியம் பெறுகின்றனா். பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்பதற்காக அரசு சாா்பில் இவா்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி விடுமுறையில் இவா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.
பிற ஆசிரியா்களைவிட எவ்விதத்திலும் குறைவின்றி கற்பிக்கும் திறமையான ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.