நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் வினிஷா தலைமை வகித்தாா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே, பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்துள்ளவா்கள், ஊதியம் பெறாதவா்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com