ஈரோட்டில் உலக தென்னை தின விழா

மாவட்ட உழவா் விவாதக் குழு, ஈரோடு உழவா் பயிற்சி நிலையம், கோபி கோட்ட கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் சபை சாா்பில் உலக தென்னை தின விழா ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உழவா் விவாதக் குழு, ஈரோடு உழவா் பயிற்சி நிலையம், கோபி கோட்ட கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் சபை சாா்பில் உலக தென்னை தின விழா ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புத் தலைவா் சென்னியப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பங்கேற்று விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

இதில், உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஆசைதம்பி, மாவட்ட உழவா் விவாதக் குழுத் தலைவா் நஞ்சப்பன், செயலாளா் வெங்கடாசலபதி, பொருளாளா் அருணாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com