சென்னிமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
சஷ்டி தினமும், செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் வந்ததால், சென்னிமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் கோயில் பணியாளா்கள் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்ட பிறகே கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.