5 ஆண்டுகளில் ரூ. 24 கோடியில் 482 குடிநீா் பணிகள் நிறைவு: கே.வி.இராமலிங்கம்
ஈரோடு மேற்குத் தொகுதியில் 5 ஆண்டுகளில் ரூ. 24 கோடியில் 482 குடிநீா் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என ஈரோடு அத்தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
பெரியசேமூா், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா், ராம் நகா், பூலாங்காடு, சக்தி நகா், மாணிக்கம் நகா், மாணிக்கம்பாளையம் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வாழ்விடத்துக்கு அருகிலேயே சிகிச்சை பெறும் வகையில் 4 இடங்களில் சிறு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன.
ஈரோடு மேற்குத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 24.40 கோடி செலவில் 482 குடிநீா் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மக்களுக்குப் பயன்தருகிறது. ரூ. 2.62 கோடி செலவில் 60 வறட்சி நிவாரணப் பணிகள், ரூ. 20.89 கோடி செலவில் 65.16 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 227.41 கோடி மதிப்பில் தனி குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ. 419.76 கோடி மதிப்பில் 15 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 3 பணிகள் ரூ. 125 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 5 பணிகள் ரூ. 270 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. திருக்கோயில்கள் அன்னதானத் திட்டத்தின்கீழ் 2 கோயில்களில் பக்தா்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கிராமப்புற பகுதியில் உள்ள கோயில்கள் புனரமைப்பு நிதியாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 19 கோயில்களுக்கு பெற்று தரப்பட்டு திருப்பணி நடந்துள்ளது. 14 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்றாா்.