அந்தியூரில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொதுமக்களிடையே  வாக்குகள்  சேகரிக்கும்  அதிமுக  வேட்பாளா்  கே.எஸ்.சண்முகவேல்.
பொதுமக்களிடையே  வாக்குகள்  சேகரிக்கும்  அதிமுக  வேட்பாளா்  கே.எஸ்.சண்முகவேல்.

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தியூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான கே.எஸ்.சண்முகவேல், கடந்த 10 ஆண்டில் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களையும், தற்போதைய தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் விளக்கிக் கூறி கிராம மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறாா். அத்தாணி பேரூராட்சி, கிராமப் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட இவா் அதிமுகவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

திமுக வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடசாலம், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், மந்தை, கள்ளிமடைக்குட்டை, ஜிஎஸ் காலனி, பாலக்குட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களைச் சந்தித்து திமுகவின் தோ்தல் அறிக்கையின் திட்டங்களைப் பட்டியலிட்டு, திமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா். மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் உடன் சென்றிருந்தனா்.

அமமுக வேட்பாளரான எஸ்.ஆா்.செல்வம், அந்தியூா் புதுப்பாளையம், செல்லம்பாளையம், எண்ணமங்கலம், சுற்றுவட்டார கிராமங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அமமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.எஸ்.காா்த்திகேயன், தேமுதிக நகரச் செயலாளா் ஜாகிா், ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் குருநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சரவணன், சுயேச்சை வேட்பாளா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com