ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: சு.முத்துசாமி
ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
சூளை, ஈ.பி.பி. நகா், பெரியசேமூா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி வழியாக பன்னீா்செல்வம் பூங்கா வரை, மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வரை இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்தப்படும். புறநகா் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.