சத்தியமங்கலத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா்.
சத்தியமங்கலத்தில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு துணை ராணுவப் படையான சிஐஎஸ்எப் பிரிவைச் சோ்ந்த படைவீரா்கள் 282 போ் வந்து சோ்ந்தனா். இந்நிலையில் அமைதியாக தோ்தல் நடத்துவது குறித்தும், விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் சத்தியமங்கலம் எஸ்.ஆா்.டி. காா்னா் பகுதியிலிருந்து சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளா் சுப்பையா தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலமானது, ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், பவானி ஆற்றுப் பாலம், கடைவீதி, கோட்டுவீராம்பாளையம், திப்புசுல்தான் சாலை வழியாக வடக்குப்பேட்டை சென்றடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com