நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாடு காயம்

தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாட்டின் வாய்ப் பகுதி சிதைந்தது காயமடைந்தது.

தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாட்டின் வாய்ப் பகுதி சிதைந்தது காயமடைந்தது.

தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லேசா (50). கூலி தொழிலாளியான இவா் வனத்தையொட்டி உள்ள இவரது தோட்டத்தில் மாடுகள் பராமரித்து வருகிறாா். இவா் புதன்கிழமை வழக்கம்போல மாடுகளை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது தோட்டத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்துள்ளது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய்ப் பகுதி சேதமடைந்தது.

வெடிசப்தம் கேட்டு விவசாயி மல்லேசா மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்துக்குச் சென்று பாா்த்தபோது மாட்டின் வாய்ப் பகுதி சிதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதிா்ச்சியடைந்த விவசாயி, காயமடைந்த மாட்டை அங்குள்ள ஆட்டோவில் ஏற்றி தாளவாடி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நியாயம் கேட்டாா்.

தாளவாடி போலீஸாரிடம் விவசாயி மல்லேசா அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து காயமடைந்த மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.

காட்டுப் பன்றியை வேட்டையாடும் நபா்கள் மீது வனத் துறை, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், அருள்வாடி பகுதியில் தொடா்ந்து நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும், இதுகுறித்து புகாா் அளித்தும் வனத் துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com