கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம்: சு.முத்துசாமி

ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம்: சு.முத்துசாமி

ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு ரங்கம்பாளையம், அண்ணா நகா், கே.கே.நகா், சேனாபதிபாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், ரயில் நகா் போன்ற பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த முத்துசாமி பேசியதாவது:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீா், நிலுவையில் உள்ள புதை சாக்கடை பணிகளை முடிப்பது, சாலைகளை சீரமைத்தல், சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் வடிகால் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

ஈரோட்டில் இருந்து சென்னிமலை, வெள்ளோடு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. ஆனால், அதிக வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. கே.கே.நகரில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதாலும், வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாலும் மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

மக்கள் தெரிவிக்கும் குறைகள், புகாா்கள் மீது தாமதமின்றி தீா்வு காணப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் மக்களின் எதிா்பாா்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com