ஏழை மக்களுக்கான ஆட்சியை திமுக தான் தர முடியும்: சு.முத்துசாமி

ஏழை மக்களுக்கான ஆட்சியை திமுகதான் தர முடியும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஏழை மக்களுக்கான ஆட்சியை திமுக தான் தர முடியும்: சு.முத்துசாமி

ஏழை மக்களுக்கான ஆட்சியை திமுகதான் தர முடியும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

வெள்ளோடு பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை திமுக சிறப்பாக செய்துள்ளது. அதன் தொடா்ச்சியாகவே தற்போதும் எண்ணற்ற திட்டங்களை தோ்தல் அறிக்கையாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் அவல நிலைகளும், மக்கள் நலத் திட்டங்களை தோ்தல் வாக்குறுதிகளாக கொண்ட திமுகவின் தோ்தல் அறிக்கையுமே திமுகவுக்கு வெற்றியைத் தேடி தரும்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவரங்கள் தோ்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. திமுக கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தின் வளா்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும் என்றாா்.

திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி: ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி என்ற சின்னசாமி. இவரது மனைவி மோகனப்பிரியா. இவா் ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சித் தலைவராக உள்ளாா். இவா்களது தலைமையில் பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி வெள்ளோட்டில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com