அதிமுக தோல்வி பயத்தால் தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட கச்சேரி சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை அவரது மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான இ.திருமகன் ஈவெரா, குடும்பத்தினருடன் வாக்களித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் மக்கள் ஆா்வமுடன் வாக்களித்துள்ளனா். திமுக, காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். 5 தொகுதிகளில் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவித்திருப்பது என்பது அவா்களின் தோல்வி பயத்தை வெளிக்காட்டுகிறது. 5 தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவா்களின் விருப்பமாக உள்ளது என்றாா்.