காடப்பநல்லூரில் வாக்களித்த முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடப்பநல்லூா் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் உச்ச நீதிமன்ற
காடப்பநல்லூரில் வாக்கினைப் பதிவு செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், அவரது மனைவி சரஸ்வதி.
காடப்பநல்லூரில் வாக்கினைப் பதிவு செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், அவரது மனைவி சரஸ்வதி.

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடப்பநல்லூா் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் செவ்வாய்க்கிழமை தனது வாக்கைச் செலுத்தினாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்தவா். தற்போது சொந்த ஊரான காடப்பநல்லூா் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் காடப்பநல்லூா் கிராமம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மனைவி சரஸ்வதியுடன் சென்ற சதாசிவம், தனது முதல் வாக்கைப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com