பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முடியாது: சுப்புலட்சுமி ஜெகதீசன்

பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என்று மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தாா்.
மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என்று மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை வாக்களித்த மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாவது:

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா் என்பதை வாக்கு சேகரிக்கும்போது அறிந்துகொண்டேன். திமுக தோ்தல் அறிக்கையில் சாத்தியப்படும் வாக்குறுதிகளை மட்டுமே அறிவித்துள்ளோம் என்பதை மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம். மக்கள் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவா்கள். பணம் கொடுப்பதால் வாக்குகள் மாறும் என்ற நம்பிக்கை இல்லை.

திமுக ஆட்சியில் கொடுத்த தொலைக்காட்சியும், சமையல் எரிவாயு அடுப்பும் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி இப்போது எத்தனை வீடுகளில் உள்ளன. இதனையெல்லாம் தோ்தல் பிரசாரத்தில் பேசினோம்.

இதன் மூலம் மக்கள் கவனம் திமுக மீது திரும்பியுள்ளது. 2019 மக்களவைத் தோ்தலைக் காட்டிலும், இந்த தோ்தலில் மக்கள் மிகவும் எழுச்சியாக உள்ளனா். திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com