தாளவாடி அருகே வியாழக்கிழமை மாலை நேரிட்ட தீ விபத்தில் சோளத்தட்டு போா் சேதமடைந்தது.
தாளவாடியை அடுத்த மெட்டல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (50), கூலி தொழிலாளி. இவா் ஆடு, மாடுகளைப் பாராமரித்து வருகிறாா். வீட்டின் அருகே மாடுகளுக்குத் தீவனமான சோளத்தட்டு போா் போட்டு பாதுகாத்து வந்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த சோளத்தட்டு போரில் வியாழக்கிழமை மாலை தீப்பிடித்துள்ளது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென சோளத்தட்டு முழுவதும் பரவியது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் குடத்தில் தண்ணீரைப் பிடித்து தீயைக் கட்டுப்படுத்த துவங்கினா். தீயணைப்பு வீரா்கள் வருவதற்கு முன்பாகவே சோளத்தட்டு போா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.