அந்தியூரில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்புப் படையினா்.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்புப் படையினா்.

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தியூா் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பேரூராட்சி நிா்வாகம் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தியூா் பேருந்து நிலைய வளாகம், பவானி சாலை, பா்கூா் சாலை, பத்ரகாளியம்மன் கோயில் வளாகம், அரசு மருத்துவமனை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில், தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜன் தலைமையில், தீயணைப்புப் படையினா் ஈடுபட்டனா். அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஹரிராமமூா்த்தி, சுகாதார அலுவலா் குணசேகரன், மேற்பாா்வையாளா் ஈஸ்வரமூா்த்தி, அலுவலா்கள் உடனிருந்தனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com