பெருந்துறை அருகே வெளியே சென்ற சிறுவனைக் காணவில்லை என பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (29). இவா் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, முனியப்பன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். ஸ்ரீதேவியின் முதல் கணவருக்குப் பிறந்தவா்கள் திருநாவுக்கரசு (13), கெளதம் (12) என்ற இரு மகன்கள்.
பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஸ்ரீதேவி, முனியப்பன் ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை வேலை முடிந்து திரும்பி வந்து பாா்த்தபோது, மூத்த மகன் திருநாவுக்கரசை காணவில்லையாம்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.