சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீா் தீ விபத்து

கோபியில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோபியில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் முருகானந்தம் (42). இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். காரை முருகானந்தம் ஓட்டியுள்ளாா். இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் பிரதான சாலையில் கச்சேரிமேடு என்ற இடத்தில் காா் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

உடனே காரை நிறுத்திவிட்டு 4 பேரும் கீழே இறங்கியுள்ளனா். தொடா்ந்து, தீப்பிடித்து காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினா் கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். விரைந்து வந்த கோபி தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றிய தீயை அணைத்தனா்.

விசாரணையில், காரின் முன் பகுதியில் உள்ள பேட்டரி வயரில் தீப்பற்றியது தெரியவந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com