பெருந்துறையில் சின்னமலையின் உருவப் படத்துக்கு ஈஸ்வரன் மரியாதை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்
கொமதேக சாா்பில் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் பொது செயலாளா் ஈஸ்வரன்
கொமதேக சாா்பில் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் பொது செயலாளா் ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பெருந்துறை ஒன்றியம் சாா்பில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தலைமை வகித்து, தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாநிலப் பொருளாளா் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஈஸ்வரன் பேசியதாவது:

தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு இருந்தோம். கரோனா தொற்று காரணமாக ஓடாநிலை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கட்சியின் ஒவ்வொரு கிளையிலும், அதன் பொறுப்பாளா்கள் அவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொல்லியுள்ளோம் என்றாா்.

சென்னிமலையில்...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சென்னிமலை ஒன்றியம் சாா்பில், சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் கான்பூா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் செங்கதுரை, கே.ராமசாமி முத்துகுமாரசாமி உள்ளிட்டோா் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com