முழு முடக்கத்தால் வெறிச்சோடியது பவானி

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட முழு முடக்கத்தால் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் வெறிச்சோடியது.
பவானியில்  மக்கள்  நடமாட்டமின்றி  காணப்படும்  அந்தியூா்  -மேட்டூா்  பிரிவு.
பவானியில்  மக்கள்  நடமாட்டமின்றி  காணப்படும்  அந்தியூா்  -மேட்டூா்  பிரிவு.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட முழு முடக்கத்தால் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் வெறிச்சோடியது.

கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரா் கோயில்கள் அடைக்கப்பட்டிருந்தன. நகராட்சி தினசரி காய்கறி சந்தை மூடப்பட்டது. பூக்கடைகள், பழக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் செயல்பட்டன.

பேருந்துகள் இல்லாமல் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடியது. பேருந்து நிலைய கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஜவுளி, பாத்திரக் கடைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அந்தியூா், அம்மாபேட்டை, லட்சுமி நகா் உள்பட பல்வேறு பகுதிகளும் இந்நிலையே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com