கோபிசெட்டிபாளையத்தில் முழு பொதுமுடக்கத்தையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் ஆய்வாளா் சோமசுந்தரம், உதவி ஆய்வாளா்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸாா் சாலையில் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினா்.