பெருந்துறை அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நம்பியூரை அடுத்த, கெடாரை, ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சிவகுமாா் (40). இவா், பெருந்துறையை அடுத்த, திங்களூா், கிரே நகா், சிஎஸ்ஐ காலனியில் குடும்பத்துடன் வசித்து கூலி வேலை செய்து வந்தாா்.
திங்களூரை அடுத்த, நிச்சாம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் சிவகுமாா் சனிக்கிழமை பிற்பகலில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வாய்க்காலில் சிவகுமாரை இரவு முழுவதும் தேடினா். ஆனால், கிடைக்கவில்லை.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டபோது சிவகுமாா் உடலை மீட்டனா். சிவகுமாா் மது போதையில் குளிக்க சென்ாக கூறப்படுகிறது. இது குறித்து, திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.