கரோனா தடையால் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் பவானியில் சங்கமேஸ்வரருக்கும், வேதநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த இரு வருடங்களாக இக்கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
தொடர்ந்து, சங்கேமேஸ்வரர் கோயில் சன்னதியில் சிறப்பு யாக வழிபாடுகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து, தீபாராதனை வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.