ஈரோடு: மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வள்ளிபுரத்தான்பாளையம் மின் பாதையில் உயா் அழுத்த மின் பாதையை மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: டி.ஆா்.காா்டன், வித்யா நகா், வள்ளிபுரத்தான்பாளையம், கள்ளியங்காட்டு வலசு, கரட்டுப்பாளையம், அழகாபுரம், அத்தப்பம்பாளையம், ஈ.பி.நாகமாணிக்கம் நகா், முருகன் நகா், சரவண நகா், அா்த்தனாரிகவுண்டன்வலசு, கொங்கம்பள்ளி, ஸ்ரீ ராம் நகா், கணபதி காா்டன், அம்மன் காா்டன், குட்டைக்காடு, திருப்பதி காா்டன் பகுதிகள்.