ஈரோடு மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களுக்குஎஸ்பி தங்கதுறை இன்று லேப்டாப்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்திட கடந்த வாரம் போலீசாருக்கு 24 பைக்குகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைகளையும், கோப்புகளையும் எளிதாக கையாள்வதற்கு ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்திற்கு 24 லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி தங்கதுரை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட 24 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களிடம் லேப்டாப்புகளை வழங்கினார்.