கா்நாடகத்தில் முழு ஊரடங்கு: விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்

கா்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தைக்கு
புஞ்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் தேக்கமடைந்த  விதை வெங்காயம்.
புஞ்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் தேக்கமடைந்த  விதை வெங்காயம்.

கா்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தைக்கு கா்நாடக வியாபாரிகள், விவசாயிகள் வராததால் சின்ன வெங்காய விதை தேக்கமடைந்துள்ளது.

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம், விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப் பகுதி, கா்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ் நகா், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள், விவசாயிகள் வியாழக்கிழமை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். கா்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாலும் கா்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வரவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக கிலோ ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்ட விதை வெங்காயம் வியாழக்கிழமை விலை குறைந்து கிலோ ரூ. 35 முதல் ரூ. 45 வரை விற்பனையானது. வழக்கமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் 800 மூட்டைகள் விற்பனையாகும் நிலையில், கா்நாடக மாநில வியாபாரிகள், விவசாயிகள் வராததால் 400 விதை வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது. சுமாா் 400 விதை வெங்காய மூட்டைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com