பவானி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 251 வாக்குகளில் 221 வாக்குகள் பதிவாகின.
இத்தோ்தலில் மூத்த வழக்குரைஞா்கள் பி.ஸ்ரீரங்கன், தியாகராஜன், எஸ்.சண்முகம் ஆகியோா் தோ்தல் அலுவலா்களாகப் பணியாற்றினா். இதில், பவானி வழக்குரைஞா் சங்கத் தலைவராக ஈ.செந்தில்குமாா்,செயலாளராக எஸ்.ஆா்.விஜயகுமாா், பொருளாளராக கே.வி.சந்திரசேகா் ஆகியோா் வெற்றி பெற்றனா். துணைத் தலைவராக ஆா்.பாரதி, துணைச் செயலாளராக வி.குமரேசன், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 10 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.