தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பவானி வட்டார நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் லட்சுமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பவானி வட்டார நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் லட்சுமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பவானி வட்டாரத் தலைவா் சன்னியாசிபட்டி பழனிச்சாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா், தெற்கு மாவட்ட தலைவா் வி.பி.சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம், ஆக. 19-ல் மூப்பனாா் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பாலம் முதல் பெருந்துறை வரையில் சேவைச் சாலையில் புதிய தாா்சாலை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான கம்பி, சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலையுயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பவானி நகரத் தலைவா் ரவி, மகளிரணி நகரத் தலைவா் விஜயகுமாரி, வட்டார துணைத் தலைவா் ராபின், பெரியபுலியூா் கிராம தலைவா் நடராஜ், வட்டார பொதுச் செயலாளா் ஈஸ்வரன், வட்டாரச் செயலாளா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com