சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போயின.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 2,824 கிலோ எடையுள்ள 7,128 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 29.39க்கும், அதிகபட்சமாக ரூ. 32.33க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 88 ஆயிரத்து 936க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது என ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் து.லட்சுமணன் தெரிவித்தாா்.