வணிகா் சங்க நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜோசப் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள் மன்சூா், ஜெயசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் ரவி வரவேற்றாா்.

கூட்டத்தில், சங்கம் மூலமாக வியாபாரிகளுக்கு வணிகா் நல வாரிய உறுப்பினா் அட்டை வாங்கிக் கொடுக்க வேண்டும். மாவட்ட இளைஞா் அணி உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும். மேலும், ஈரோடு மாவட்ட ஐயன் திருவள்ளுவா் சந்தை வியாபாரிகள் நலச் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் ஆதரவை கேட்டுள்ளாா்கள். அவா்களின் வாழ்வாதாரம் சிறக்க முழு ஆதரவு வழங்குவது, சங்க வியாபாரிகளின் வியாபாரத்தைப் பெருக்குவதற்கு வியாபாரத் திட்டம் ஒன்றை வகுத்து, அதை செயல்படுத்துவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com