ஈரோடு மாவட்டத்தில் 183 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 95,726ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 159 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 93,367 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,718 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 641 போ் உயிரிழந்துள்ளனா்.