ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ‘டி’ பிரிவில் உள்ள ஒரு வீதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வசித்து வந்த வீதியை ‘சீல்’ வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனா்.
வீதிக்குள் வெளிநபா்கள் யாரும் வராமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட வீதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சாா்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.