தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி சாா்பில் சுதந்திர தின விழா காளிங்கராயன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.ஸ்ரீதா், மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி முன்னிலை வகித்தனா்.
மேட்டுநாசுவம்பாளைம் கிராமக் கமிட்டித் தலைவா் பாலசுப்பிரமணியம் தேசியக் கொடியேற்றினாா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பவானி வட்டாரத் தலைவா் பழனிச்சாமி, நகரத் தலைவா் ரவி, மகளிரணித் தலைவி விஜயகுமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.