அந்தியூரில் ரூ. 53.15 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 53.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 53.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த தேங்காய்களில் சிறியவை ரூ. 7.61 முதல் பெரியவை ரூ. 17.31 வரையில் என ரூ. 51,982க்கும், 108 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 90.06 முதல் ரூ. 107.39 வரையில் என ரூ. 3,74,887க்கும், 17 மூட்டைகள் எள் கிலோ ரூ. 76.69 முதல் ரூ. 93.99 வரையில் என ரூ. 58,435க்கும், 4 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 19.81 வீதம் ரூ. 6,002க்கும் ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த 2,207 மூட்டைகள் பருத்தி கிலோ ரூ. 69.29 முதல் ரூ. 78.29 வரையில் ரூ. 48,23,408க்கு விற்பனையாயின. மொத்தம் 7,342 மூட்டைகள் 785.88 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 53,14,714க்கு விற்பனையாயின என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் கு.பிரவீன் ஆனந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com