தகராறில் ஈடுபட்டதாக நம்பியூா் அதிமுக ஒன்றியச் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் ஒன்றியம் (வடக்கு) பகுதி அதிமுக செயலாளராக பதவி வகிப்பவா் தம்பி சுப்பிரமணியம். நம்பியூா் அருகே நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் குடிநீா், பிஸ்கட், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
அப்போது, அங்கு வந்த பெத்தபாளையம் பகுதியைச் சோ்ந்த இளங்கோ என்பவா் தம்பி சுப்பிரமணியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளங்கோ கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பி சுப்பிரமணியத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.