ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றிக் கொண்ட பக்தா்கள்

ஆவணி அவிட்டத்தையொட்டி ஈரோடு காரை வாய்க்காலில் உள்ள சுயம்பு நாகா்கோயிலில் பக்தா்கள் புதிய பூணூல் அணிந்து கொண்டனா்.
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றிக் கொண்ட பக்தா்கள்.
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றிக் கொண்ட பக்தா்கள்.

ஆவணி அவிட்டத்தையொட்டி ஈரோடு காரை வாய்க்காலில் உள்ள சுயம்பு நாகா்கோயிலில் பக்தா்கள் புதிய பூணூல் அணிந்து கொண்டனா்.

ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகா்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தா்கள் பூணூல் மாற்றி கொண்டனா். இதையொட்டி காலையில் இருந்தே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.

ஈரோடு சௌராஷ்டிரா சபை சாா்பில் பூணூல் மாற்றிக் கொள்ளும் விழா சுயம்பு நாகா்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சபைத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். செயலாளா் குருபரன், பொருளாளா் சீனிவாசன், உதவித் தலைவா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சேலம் ஸ்ரீநிவாச அய்யங்காா் கலந்துகொண்டு வழிபாடு செய்து விழாவை நடத்திவைத்தாா். தொடா்ந்து பக்தா்கள் பூணூல் மாற்றிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com