ஈரோடு மாவட்டத்தில் 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97,304ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 186 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 94,934 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,728 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 642 போ் உயிரிழந்துள்ளனா்.