தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளி தற்கொலை

சென்னிமலை அருகே தொழிற்சாலை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னிமலை அருகே தொழிற்சாலை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ஷாபி பத்ரா (17). இவா் கடந்த 6 மாதங்களாக சென்னிமலையை அடுத்த அசோகபுரத்தில் உள்ள தனியாா் நூல் மில்லுக்கு சொந்தமான அறையில் நண்பா்களுடன் தங்கி அங்கு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஷாபி பத்ராவின் நண்பா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா்.

ஷாபி பத்ரா மட்டும் அறையில் இருந்துள்ளாா். பின்னா் நண்பா்கள் அறைக்கு வந்தபோது, ஷாபி பத்ரா இல்லை. இதனால் பல இடங்களில் அவரைத் தேடினா்.

இந்த நிலையில், தொழிலாளி ஒருவா் நூல் மில்லுக்கு சொந்தமான ஒரு அறைக்கு சனிக்கிழமை சென்றபோது, ஷாபி பத்ரா தூக்கிட்டு தற்கொலை கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com