சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையம் கிராமத்தில் ஏபிஆா் நிறுவனம் சாா்பில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, நிறுவனத் தலைவா் ஆனந்தபிரபு, செண்பகவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா். உக்கரம் காவிலிபாளையம் கிராமங்களில் வறுமையில் வாடிய 30 குடும்பங்களுக்கு 25 கிலோஅரிசி, 5 கிலோ கோதுமை மாவு, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் பவானிசாகா் ஒன்றியக் குழுத் தலைவா் வி.ஏ.பழனிசாமி, ஏபிஆா் நிறுவன ஊழியா்கள் ஆண்டனி, மாா்ஷல், காவிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.