தாளவாடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமின்றி உயிா்தப்பினாா்.
சத்தியமங்கலத்தில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்புகள் கா்நாடகத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரியை சத்தியமங்கலத்தைச் சோ்ந்த தங்கராஜ் (50) ஓட்டினாா்.
குமிட்டாபுரம் வனச் சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது சாரல் மழை காரணமாக கரும்பு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. லாரியில் இருந்து கரும்புகள் சரிந்து விழுந்தன. தங்கராஜ் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். இதையடுத்து, அங்கு வந்த கரும்புத் தொழிலாளா்கள் சிதறிய கரும்புகளை எடுத்து மாற்று லாரியில் ஏற்றினா்.
இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.